வேலை வாங்கித் தருவதாக மோசடி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

0
3971

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ஜேசுராஜசேகரன். இவர் இதற்கு முன்பு நாகர்கோவில் புதுக்கடையில் வேலை பார்த்து வந்தார்..

அப்போது அங்கு சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணி பெற்று தருவதாக 1.7 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக தெரிகிறது.

இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கன்னியாகுமரி எஸ்பி இடம் புகார் செய்தனர். இதை எடுத்து விசாரணையில் இறங்கிய எஸ் பி அலுவலகம், குற்றச்சாட்டில் முன்முகாந்திரம் இருந்ததால் ஜேசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here