திருநெல்வேலி பழைய பேட்டையைச் சேர்ந்த மூன்று பேர் திருநெல்வேலி ஜங்ஷன் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிக்க வந்தபோது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நேற்று நீரில் மூழ்கினர்.
அதில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மாயம் ஆனார். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி மூன்றாவது நபரான அப்துல் ரகுமான் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.








