தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர்.இதனால் ஏதேனும் விபத்து ஏற்படும் முன் இதனை தடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.









