தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே புதிய குடிநீர் திட்டத்தில் குடிதண்ணீர் கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். தொடர்ந்து அந்த மனுவை கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.









