தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பணி ஆணைகளை பெற்றுக் கொண்டனர். இதில் யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார்.