இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு டெல்லியில் பேட்டியளித்த விமானப்படை தளபதி பதூரியா, ‘ தற்போதைய சூழலில் எல்லைப்பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. புல்வாமா தாக்குதல் நம்மை உஷாராக இருக்க வலியுறுத்துகிறது. தீவிரவாதத்தை முறியடிப்பதில் அரசின் நடவடிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.
முன்னதாக, பதூரியா, தரைப்படைத்தளபதி பிபின் ராவத், கடல்படை தளபதி கரம்பீர்சிங் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் மடிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.














