ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஓபப்பிகொண்டலு சுற்றுலா தலத்துக்கு படகில் 62 பேர் சென்றனர்.
கச்சுலுரு என்ற இடத்திற்கு அருகே சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. உயிர் காக்கும் உடை அணியாத பலரும் தண்ணீரில் மூழ்கினர் எனினும், 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
விபத்து நடந்த அன்று 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் மாயமான மற்ற 32 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.













