சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழா நடத்துவதற்கு அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக சென்றனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் பணி நிமித்தமாக வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனு கொடுப்பதற்காக வந்திருந்த பொதுமக்கள் செயல் அலுவலர் அங்கு இல்லாததால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து வட்டாட்சியரிடம் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சென்று மனு அளித்தனர்.