கயத்தாறு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சங்கிலி பாண்டியன் (49) என்பவர் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.









