தூத்துக்குடியில் இருந்து சிவகளை வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்துகள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அந்த நேரத்தில் வரும் தனியார் பேருந்தில் மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.









