தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை அய்யனார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கடாட்சபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவர் கோவில் வளாகத்தில் உள்ள உத்திரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை சாத்தான்குளம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.











