கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பொதுமக்கள் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நவுஷத் அலி என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் கியூ பிரிவு போலீசிடம் ஒப்படைத்தன.ர் கியூ பிரிவு போலீசார் நவுஷத்தின் அடையாள ஆவணங்களை ஆய்வு செய்துவருகின்றனர்.








