விவேகானந்தர் மண்டப பொன்விழா

0
1201

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் சிவனை நினைத்து கடலின் நடுவே உள்ள ஒரு பாறையில் ஒற்றை காலில் தவம் செய்ய பாறையில் அம்மனின் கால் தடம் பதிந்திருந்தது.

1892-ம் ஆண்டு குமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால் தடத்தை பார்த்து யானம் செய்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி அம்மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மண்டபம் நிறுவி வருகிற (செப்டம்பர்) 2-ந் தேதியுடன் 49 ஆண்டுகள் முடிந்து 50-வது ஆண்டு தொடங்குகிறது. அதனால், இந்த பொன்விழா கொண்டாட்டத்தை ஒரு ஆண்டு “மகா சம்பர்க்க அபியான்“ என்ற பெயரில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.

விவேகானந்த கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்றைய தினம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க அப்போது, அங்கு விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here