தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளையில் சி எஸ் ஐ கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கமும் கலுங்கை புலிகள் அணியினரும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி சி எஸ் ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சபை ஊழியர் நெல்சன் ஆசிரியர் தலைமை வகித்தார். கலுங்குவிளை கூட்டுறவு வங்கி தலைவர் இதழாளர் அய்கோ முன்னிலை வகித்தார்.

போட்டியில் திடியூர் பி எஸ் என் கல்லூரி அணி முதல் பரிசு பெற்றது. நாசரேத் மர்காஸிஸ் கல்லூரி அணி இரண்டாம் பரிசையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி மூன்றாம் பரிசையும், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி நான்காம் பரிசையும் தட்டிச் சென்றன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் தாசில்தார் தம்பிராஜ் ஈனோக், ஆசிரியர் மகா பால்துரை, திருச்செல்வம் தினகரன், ஊர் பிரமுகர்கள் சகாயம், கனகராஜ், அல்பர்ட் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் போனிபாஸ், தொழிலதிபர்கள் சாம்ராஜ், யோசுவா சாமுவேல், ஆனந்த பாபு, ஜெரால்ட் சிம்சோன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
ஜெகந்த், ஜானகிராமன், பிரின்ஸ், ஜோயல் சிமியோன் ஆகியோர் நடுவராக பணியாற்றினர். யோசுவா லெனின் தமிழன், ராபின், சத்யராஜ், சகேயு, ஜெனோ, ஜோன்ஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.







