களக்காடு அருகே உள்ளதிருக்குறுங்குடி மலை நம்பி கோவில் செல்லும் வழியில் திடீர் காட்டாற்றுவெள்ளம் சூழ்ந்தது. இதில் 200பக்தர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
திருமலை நம்பி கோவிலில் 150 பக்தர்கள் வனப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வடிந்ததும் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதாக பக்தர்கள் மீட்பு படையினரிடம் தெரிவித்தனர்.மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.டெம்போ ட்ராவலர், ஆட்டோக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.









