தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே பள்ளங்கிணற்றைச் சேர்ந்த சேர்ந்த பட்டு ராஜ் மகன் ரேவந்த் குமார்(23) நேற்று நள்ளிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார் .
இந்த ஊரில் தசரா நடத்துவது தொடர்பாக இவரது குடும்பத்தாருக்கும் ஜெகன் என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தசராவுக்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ரேவந்த் குமாரை நைசாக நொச்சிக்குளம் விலக்கு பஸ் நிறுத்தம் அருகே அழைத்து வந்து கொலை செய்துள்ளனர்
இது குறித்து சாத்தான்குளம் போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.








