திருப்பரங்குன்றம் கோவில் அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருப்பரங்குன்றம் அருகே உள்ள பதினாறாம் கால் மண்டபம் முன்பு போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது, திருநகரில் இருந்து அவனியாபுரத்திற்கு சென்று கொண்டிருந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை ஈடுபட்டனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூடைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணை செய்ததில், மதுரையைச் சேர்ந்த வசந்த், முத்துமாரி, மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
எனவே, பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மூன்று பேரையும் குடிமை பொருள் வழங்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.












