கடல் அட்டை கடத்தியவருக்கு சிறை தண்டனை

0
312

தூத்துக்குடியில் கடல் அட்டை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் சேசு மகன் ராஜேந்திரன் (46). இவர் கடந்த 8.2.20217 அன்று தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தியதாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு எஸ்.டி.கனிமொழி, ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here