சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனது பெயர் மனைவி பெயரில் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றி எழுதியதாக தற்போது சுகாதார அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் வழக்கு விசாரணையை நடத்தாமல் இருக்கவும் கோரி மா சுப்பிரமணியன் சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் நேரில் ஆஜராவதிலிருந்து சுப்பிரமணியனுக்கு விலக்கு அளித்த நீதிமன்றம் அவர் மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.









