தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை அடுத்த தேமாங்குளத்தில் நேற்று ராஜ்குமார் -நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண ஊர்வலத்தின் போது திடீரென கோதாவில் குதித்த மணமகள், நமது பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை விளையாடி அசத்தினார்.

திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகம் எழுப்பினர். மணமகன் மணமகளின் சிலம்ப வீச்சை மெய்சிலிர்க்க பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








