முதல் படத்தை அனுப்பிய சந்திரயான்- 2

0
1233

ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் -2 கடந்த புதன்கிழமையன்று பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கி ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

அதன்பின் சுற்று வட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ள நிலையில், நிலவின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, சுமார் 2,650 கி.மீட்டர் தொலைவில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here