தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு இன்று பகல் வந்தார்.
அப்போது அவர், ‘ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கொரோனா சவால்களை வென்றுவிட்டு, தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றார்.












