தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜேம்ஸ், அறக்கட்டளையின் பொருளாளர் விக்னேஷ், காப்பக ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









