பாளையங்கோட்டை முருகன் குறிச்சி கால்வாய் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதிலிருந்து சில மீட்டர் தொலைவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் சிறிது நேரத்திற்கு முன்புகாணப்பட்டது.
அந்த வாலிபர் மூக்கில், முகத்தில் ரத்தம் உறைந்துள்ளது. வெற்றிவேல் என்று மார்பில் பச்சை குத்தியுள்ளார்.
உடல் காணப்பட்ட தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி விட்டு விசாரணை செய்து வருகின்றனர். வாலிபர் கொலையுண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.









