களக்காடு அருகே இடையன்குளத்தை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் ரூபன் (23). இவர் புலவன் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற போது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சூழ்ந்துகொண்டது.
அவரை சரமரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. முன்பகை காரணமாக கொல இநடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பகைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.







