அயோத்தி தீர்ப்பு இஸ்லாமியர் மனதில் நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது. இதை சன்னி வஃபு வாரியம் வெளிக்காட்டாமல் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு செய்யமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தது.
ஆனால், பல இஸ்லாமிய அமைப்புகள் வழக்கை மறு சீராய்வு செய்ய தீர்மானித்தனர். அதற்காக இன்று லக்னோவில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூடி விவாதித்து அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானித்தன. சீராய்வு மனுவை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மூல்ம தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.













