சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பழமைவாய்ந்த அப்பன் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். இரவு கருடசேவை நடந்தது. கருடசேவைக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.









