களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் தேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது அதே ஊரை சேர்ந்த நாராயணராம் (வயது 45) சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 மது பாட்டில்களையும், ரூ.120-யும் பறிமுதல் செய்தனர்.








