நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என ‘நாசா’ முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ‘நாசா’ முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில்,
உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை ‘நாசா’ உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.