தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான பொன் முருகேசன் தலைமை வகித்து பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது திமுக கிளை செயலாளர் ஜெயபால் மற்றும் ரேஷன் கடை பணியாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







