வல்லநாடு சரணாலயத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..?
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் காப்புக்காடு என அழைக்கப்படும் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் மான்கள் மற்றும் மிளா மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகை மான்கள் அப்பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வகை மான்களை பார்க்கும் வகையில் அப்பகுதி சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.









