கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு

0
446

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தார். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. திங்கடள்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட,, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமாகியுள்ளார்‌.

சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில 1கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்றதும்,, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சிறுவனை தேடி பார்த்தனர். அப்பகுதியில் ஒவ்வொரு வீடு வீடாக சோதனையும் நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில்
மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலையில் சிறுவன் தனது வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் சடலமாக கிடந்துள்ளான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாகவும்,, இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

நேற்று காலையில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here