ஏரல் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரலிங்கம் – தேவிகலா தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது.
இந்த நிலையில் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு தேவிகலாவை மர்ம நபர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.









