தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் பகுதியில் கோவில் கொடை விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து சமாதான கூட்டம் நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டது.








