தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அணிஸ் புகாரி (26) என்பவர் மீனவராக உள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலுக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை அறிவாளால் தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.