கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை அங்கு வந்த பாண்டியின் மனைவி சங்கர்மதி மற்றும் அவரது மகன்கள் இருவர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.









