தட்டார்மடம் அருகே சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுப்ரமணியன் (28). இவர் முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் லிங்ககுமார், சுப்பிரமணியன் மீது காரால் மோதியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.










