உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று முன்தினம்இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் “பிடிக்கிறேன்” என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி கொன்றனர்.
மானை பிடிக்க வந்த வனத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் வனவர் ஆனந்த், வனகாப்பாளர் தங்கசாமி, வனகாவலர் ஜோஷ்வா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் உத்தரவிட்டார்.