தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் – நாசரேத் நெடுஞ்சாலையோரம், ஆனந்தபுரம் அருகில் ஒரு தோட்டத்திலிருந்து திடீரென்று காட்டு தீ பரவியது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வரை தீயின் தாக்கம் காணப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சென்று தீ பரவாமல் தடுத்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் தப்பின. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.









