நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு புகார் மனு மீதான விசாரணைக்கு தனது கட்சிக்காரர் ஒருவருடன் சண்முக சுந்தரம் என்ற வக்கீல் சென்றார்.
அங்கு நடந்த விசாரணையின் முடிவில் போலீசார் வக்கீலுடன் சென்றவரை கைது செய்ய முயன்றனர். இதில் வக்கீலுக்கும் போலீசாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் அங்கு வழக்கறிஞர்களும் உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்தனர். தற்போது வரை பரபரப்பான சூழல் நிலவுகிறது.









