மதுரை மாநகராட்சி, 77 வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேச்சியம்மாள் போட்டியிடுகிறார். இவரது வேட்பு மனுவைை முன் மொழிந்த ரேவதி வாபஸ் பெற்றதால், வேட்பு மனு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் பூக்கடை கண்ணன் தலைமையில் மண்டலம் 4 அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.














