மதுரை விமான நிலையத்தில் இன்று துபாய் மற்றும் கொழும்பிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
துபாயில் இருந்து வந்த 141 பயணிகளுக்கும் கொழும்பிலிருந்து வந்த 119 பயணிகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ,துபாயில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டம் , புதுார் பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணன் (வயது 39).
என்பவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவரை 7 நாட்கள் தனிமையில் வைக்க தமிழக சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், அவருக்கு ஒமிக்கிரான் தொற்று உள்ளதா என அறிய சளி மாதிரி சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.













