நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அண்ணத்திகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி அமுதா(30). இவரது நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து இன்று நடந்த தகராறின் முடிவில் மனைவி அமுதாவை கத்தியால் சரமாரியாக மாரியப்பன் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அமுதாவை பணகுடி போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்தார்








