மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் சரகத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இருவர் கொலை தொடர்புடையவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தனிப் படையினருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாலா என்ற பல்லு பாலா, ஓடைப்பட்டி,குண்டுமணி பாலா ஜீவா நகர், மதுரை, பாண்டி செல்வம், / கருப்பாயூரணி, முத்தையா சந்திரன் கணேசன், ஆணையூர், கோபி என்ற கோகுல் , ராஜா ஒத்தக்கடை ஆகியோரை கைது செய்தனர்
அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆட்டோக்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்
பட்டுள்ளனர்.







