தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்த முத்துமாரி, இவரது இரு மகள்கள் யுவராணி, நித்யா ஆகியோர் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டனர்.
மூன்று பேரின் உடல்களை மீட்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் முத்துமாரியின் தந்தை தேவராஜ் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துமாரிக்கு
உயில் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் குடியிருந்த அவரது இளைய சகோதரர் ஆண்டவர் வீட்டை காலி செய்யாமல் பிரச்சினை செய்தது மட்டுமின்றி, முத்துமாரி மற்றும் அவரது மகள்களையும் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஆண்டவரை கைது செய்துள்ளனர் .









