மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டட பணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த மானகிரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பாண்டி என்பவர் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போதிய பாதுகாப்பு இன்றி தொழிலாளர் பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்தகாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.














