மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ,வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி இவரது மகன் கதிர்வேல் ( 36). இவருக்கு திருமணமாகி, சண்முகப்பிரியா( 25).
என்ற மனைவியும், ஹனிஸ்க் ( 7).மற்றும் பார்த்திவ் ( 3) .ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .

கதிர்வேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில், மலையில் பணியில் இருந்தபோது, ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம், தலைமையகத்துக்கொண்டு சென்றனர். அங்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது உடல் இன்று இண்டிகோ விமானம் மூலம், இரவு எட்டு முப்பது மணி அளவில் மதுரை வந்தடைகிறது.












