மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு சிவ பிரசாத் தலைமையில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் லட்சுமி மற்றும் மதுவிலக்கு போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில், மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட எஸ்.
ஆலங்குளம் இரண்டாவது ஸ்டாப் கருப்பையா தேவர் காம்பவுண்டில் வசிக்கும் தங்கராஜ் மகன் அசோக் குமார் 31. என்பவர் வீட்டில் தயார் செய்த சாராய ஊறல் 20 லிட்டரை பறிமுதல் செய்தனர்.
அசோக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.













