மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் பிறந்த நாள் விழாவை தமிழ் அமைப்புகள் மறந்த நிலையில், அவரது 119ஆவது பிறந்த நாளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கொண்டாடியது. பாளை மாகராஜ நகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு தமமுக மாவட்டத்தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
\
அத்துடன் தேவநேயப்பாவணருக்குபாளை சித்த மருத்துவமனை எதிரில் முழு உருவ வெண்கல சிலை நிறுவவும், 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் சாந்தன் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்யவும் முழக்கமிட்டனர்.









