ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம் தீவிரமாகியுள்ளது. அரசு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து உண்ணாவிரதமும், வேலை நிறுத்தமும் தொடர்கிறது.
இதுகுறித்து அரசு மருத்துவர் சங்க ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். அவர்களாக அனுப்புவதற்குள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பணி விலகவும் தயாராக உள்ளோம். நீங்களாக நீக்கினால் அவமானம், நாங்களாக பணி விலகினால் கௌரவம்’ என்றார்.














